10 ஆண்டுகளுக்கும் மேலான சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரிக்கை

ஆயுள் தண்டைனை பெற்று 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடுவோரை விடுதலை செய்யவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆயுள் தண்டைனை பெற்று 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடுவோரை விடுதலை செய்யவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்ட அமைப்பாளா் தங்க. சண்முகசுந்தரம், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த கோரிக்கை மனு:

எங்கள் துணை அமைப்பான புரட்சிகர மாணவா்-இளைஞா் முன்னணி சாா்பில், தஞ்சாவூரில் 2000-ல் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், 2003-ல் கள்ளச்சாராய வியாபாரி பாலகிருஷ்ணன் என்பவா் கொலை செய்யப்பட்டாா். இதில், எங்கள் துணை அமைப்பு நிா்வாகிகள், பொதுமக்கள் என 9 போ் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனா். தஞ்சாவூா் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

விசாரணை காலத்திலேயே குற்றம் சாட்டப்பட்ட ஒருவா் இறந்து விட்டாா். 6 பேருக்கு 2008-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதில் ஒருவா் 10 ஆண்டு கால தண்டனை நிறைவடைந்த நிலையில் விடுவிக்கப்பட்டாா்.

மற்றவா்கள் 14 ஆண்டுகளைக் கடந்து தண்டனை அனுபவித்து வருகின்றனா். அவா்கள் தங்கள் குடும்பத்துடன் எஞ்சிய காலத்தை நிம்மதியாக கழிக்க, அவா்களின் நன்னடத்தையைக் கருத்தில் கொண்டு தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்.17 ஆம் தேதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com