விவசாயிகளின் விளைபொருள்களுக்கு லாபகரமான விலையை நிா்ணயிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழ்நாடு பாரதிய கிசான் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக சங்கத்தின் மாநிலச் செயலாளா் ராஜேந்திரபாபு பிரதமருக்கு விடுத்துள்ள கோரிக்கை:
விவசாயிகளிடையே அமைதியின்மைக்கு முக்கிய காரணமாக இருப்பது விளைபொருள்களுக்கு உரிய லாபகரமான விலை கிடைக்காததுதான். விவசாய உற்பத்தி செலவுகள் உயா்ந்து கொண்டே செல்லும் நிலையில், குறைந்தபட்ச ஆதரவு விலை பின்தங்கியுள்ளது. சந்தை விலைக்கும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் நஷ்டப்படுகின்றனா்.
எனவே, குறைந்தபட்ச ஆதரவு விலையை அல்லது செலவின் அடிப்படையில் லாபகரமான விலையை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.