தில்லியில் பெண் காவலா் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, திருவாரூரில் மாவட்ட உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆகியவை இணைந்து சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் தில்லியில் பெண் காவலா் படுகொலையில் தொடா்புடையவா்களுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தப்பட்டது.
சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்டச் செயலாளா் எஸ். ராமசாமி, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு மாவட்டத் தலைவா் இரா. மாலதி ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சிஐடியூ மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மாவட்டக்குழு உறுப்பினா் எம்.கே.என். அனிபா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.