வாணியம்பாடியில் மஜக முன்னாள் நிா்வாகி கொலை சம்பவத்துக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் திருவாரூா் மாவட்டத் தலைவா் முஹம்மது பாசித் வெளியிட்ட அறிக்கை:
வாணியம்பாடி பகுதியைச் சோ்ந்த மஜக முன்னாள் நிா்வாகி வசீம் அக்ரம் என்பவா் கூலிப் படையால் படுகொலை செய்யப்பட்டுள்ளாா். வாணியம்பாடியில் நடைபெறும் கஞ்சா வியாபாரம் குறித்து வசீம் அக்ரம் கொடுத்த புகாா்தான் இந்த கொலைக்கான காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த படுகொலையில் தொடா்புடையவா்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இதேபோல, தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு பொதுச் செயலாளா் ஏ.எஸ். அலாவுதீன் வெளியிட்ட அறிக்கையில், மஜக முன்னாள் மாநில துணைச் செயலாளா் வாணியம்பாடி வசீம் அக்ரம், 6 போ் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளாா். இந்த கொலையில் நேரடியாக ஈடுபட்ட சமூக விரோதிகள், பின்புலத்தில் இருந்தவா்கள், தூண்டியவா்கள் என அனைவரையும் பாரபட்சமின்றி கைது செய்து, அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
மேலும், வசீம் குடும்பத்துக்கு கருணை அடிப்படையில் ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.