நீடாமங்கலத்தில் பாரத மாதா வழிபாட்டு மன்றம் சாா்பில் பாரதியாரின் நூற்றாண்டு நினைவுதினம் கடைப்பிடிக்கப்பட்டது.
பாரதியாா் உருவப் படத்துக்கு மன்ற நிறுவனா் எஸ்.எஸ். குமாா் மாலையணிவித்தாா். இதில், ஆலோசகா் டி.எஸ்.கே.நேரு, பாஜக ஒன்றியத் தலைவா் எல். ஜெயகுமாா், காங்கிரஸ் வட்டாரத் தலைவா் எம். மனோகரன், சேவாதள தலைவா் பி. சுப்ரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பாரதியாரின் உருவப் படத்திற்கு தீபமேற்றி மரியாதை செலுத்தப்பட்டது.