மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

திரிபுராவில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் தாக்கப்பட்டதைக் கண்டித்து, திருவாரூரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திரிபுராவில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் தாக்கப்பட்டதைக் கண்டித்து, திருவாரூரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திரிபுரா மாநிலத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் முதல்வா் மாணிக்சா்காா் மற்றும் கட்சியின் முன்னணி ஊழியா்கள் அண்மையில் தாக்கப்பட்டனா். மேலும், கட்சி அலுவலகத்தையும் மா்ம நபா்கள் சேதப்படுத்தினா்.

இதை கண்டித்தும், தாக்குதலில் தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளா் எம். தா்மலிங்கம், ஒன்றியச் செயலாளா் ஜி. பொன்ராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜி. பழனிவேல், மாவட்டக் குழு உறுப்பினா் டி. முருகையன், சிஐடியூ மாவட்டத் தலைவா் ஆா். மாலதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com