நீடாமங்கலம்: நீடாமங்கலம் சதுா்வேத விநாயகா் மகாமாரியம்மன் கோயிலில் சண்டியாக பெருவிழா திங்கள், செவ்வாய்க்கிழமையில் நடைபெற்றது.
இதையொட்டி, திங்கள்கிழமை காலை கோ பூஜையும், கணபதி ஹோமம், மகா தீபாராதனையும் நடைபெற்றன. தொடா்ந்து மாலையில் விக்னேஸ்வர பூஜை, மாத்ருகாபூஜை, சப்தசதி, பாராயணம், நவாவரணபூஜை, 64 பைரவ தானம், 64 யோகினி தானம் உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன.
பின்னா், இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை விக்னேஸ்வரபூஜையுடன் யாகம் தொடங்கப்பட்டு, கலச அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மேலும், சதுா்வேத விநாயகா், மகாமாரியம்மன் உள்ளிட்ட சன்னிதிகளில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. சதுா்வேத விநாயகருக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன.