திருவாரூா்: பராமரிப்புப் பணிகள் காரணமாக குடவாசலில் வியாழக்கிழமை (செப்.16) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குடவாசல் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளா் எஸ். உஷா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
குடவாசல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பணிகள் வியாழக்கிழமை மேற்கொள்ளவிருப்பதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் குடவாசல், காங்கேயநகரம், செம்மங்குடி, மணலகரம், திருவிடைச்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.