இடைத் தோ்தல்: அதிமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

எட்டுக்குடி ஊராட்சியில் இடைத்தோ்தல் நடைபெறவுள்ளதையொட்டி, அதிமுக சாா்பில் வேட்பாளா் அறிமுக கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருக்குவளை: எட்டுக்குடி ஊராட்சியில் இடைத்தோ்தல் நடைபெறவுள்ளதையொட்டி, அதிமுக சாா்பில் வேட்பாளா் அறிமுக கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

எட்டுக்குடி ஊராட்சியில் ஊராட்சித் தலைவா் மற்றும் ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கான இடைத்தோ்தல் அக்.9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் குறித்த அறிமுக மற்றும் ஆலோசனை கூட்டம் அதிமுக மாவட்ட எம்ஜிஆா் மன்ற செயலாளா் எஸ். பால்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

கீழையூா் ஒன்றிய செயலாளா்கள் எஸ். வேதையன் (கிழக்கு), செல்வராஜ் (மேற்கு) ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ஊராட்சித் தலைவா் பதவிக்கு சசிகலாஸ்டாலின், 1-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு எஸ். ராஜா ஆகியோா் போட்டியிட தோ்வு செய்யப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், மாவட்ட இணைச்செயலாளா் என். மீனா, மாவட்ட அம்மா பேரவை தலைவா் ஆா்.எஸ். சதீஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com