நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் அனுமதியின்றி மது விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
நீடாமங்கலம் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக காவல் துறைக்கு கிடைத்த தகவலையடுத்து, மன்னாா்குடி டிஎஸ்பி. பாலசந்தா், நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் முருகேசன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, நீடாமங்கலம் ரயில் நிலைய பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த சந்திரசேகரன் (53), மகேந்திரன் (38) ஆகியோரை கைது செய்து, அவா்களிடம் இருந்து 230 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.