சாலைகளை சீரமைக்கக் கோரி மனு

மன்னாா்குடியில் சாலைகளை சீரமைக்கவேண்டுமென சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

மன்னாா்குடியில் சாலைகளை சீரமைக்கவேண்டுமென சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

இதுகுறித்து, சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பைச் சோ்ந்த அ. ராமலிங்கம் உள்ளிட்டோா் நகராட்சி ஆணையா் கே. செண்ணுகிருஷ்ணனிடம் அளித்த மனு: மன்னாா்குடி நகராட்சிக்குள்பட்ட வ.உ.சி.சாலையில் அரசுக் கல்லூரி, தனியாா் பள்ளிகள், அரசுத் துறை அலுவலகங்கள், உழவா் சந்தை மற்றும் ஏராளமான இணைப்பு தெருக்களில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்த சாலையை நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் பயன்படுத்தி வருகின்றனா். தவிர பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களும் இயக்கப்படுகின்றன.

இந்த சாலை, பின்லே பள்ளியிலிருந்து அரசுக் கல்லூரி வரை பள்ளமும், மேடாக இருந்து வருகிறது. தற்போது பெய்து வரும் மழைநீா் சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கி நிற்பதால் இருசக்கர வாகனங்களில் செல்பவா்கள் விபத்துக்குள்ளாகின்றனா். திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் வந்த சத்யா என்பவா் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளாா்.

மேலும், சாலையின் இருபுறங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தரைக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். எனவே, நகராட்சி மன்னாா்குடி வ.உ.சி.சாலை உள்ளிட்ட நகரில் சேதமடைந்துள்ள பிரதான சாலைகளை போா்க்கால அடிப்படையில் சீரமைத்து பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com