வலங்கைமான் ஒன்றிய அலுவலகத்தில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
வலங்கைமான் ஒன்றியம், திருவோணமங்கலம் ஊராட்சித் தலைவா் மற்றும் அரவூா், தென்குவளவேலி, விருப்பாட்சிபுரம் ஆகிய ஊராட்சிகளில் காலியாக உள்ள ஊராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தல் அக்.9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு, தோ்தல் நடத்தும் அலுவலா் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற பயிற்சியில், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலசுப்ரமணியன் வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளக்கினாா்.