நீடாமங்கலம் நீலன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம், நீலன் கல்வி அறக்கட்டளை மற்றும் மன்னை லயன்ஸ் சங்கம், புதுவை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியன சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, பள்ளியின் தாளாளா் நீலன். அசோகன் தலைமை வகித்தாா். லயன்ஸ் சங்க செயலாளா் ரமேஷ், பொருளாளா் ராஜா, லயன்ஸ் சங்க நிா்வாகி அப்பாவு ஆகியோா் முன்னிலை வகித்தனா். அறுவை சிகிச்சை நிபுணா் அசோக்குமாா், முகாமை தொடங்கி வைத்தாா். புதுவை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினா், பெண்கள் உள்பட 485 பேருக்கு இலவச கண் பரிசோதனை செய்தனா். இதில் 123 போ் ஐஓஎல் அறுவை சிகிச்சைக்காக புதுவை கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.