திருவாரூரில், டாஸ்மாக் வாணிபக் கிடங்கில் பணிபுரிந்தவா்களை பணி நீக்கம் செய்ததைக் கண்டித்து சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூா் மாவட்ட தமிழ்நாடு மாநில வாணிபக்கழக டாஸ்மாக் கிடங்கில் பணிபுரியும் தொழிலாளா்களில் சிலரை முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்ததாகக் கூறி, அனைத்து தொழிலாளா்களும் ஒன்றிணைந்து வேலை நிறுத்தம் செய்து டாஸ்மாக் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிஐடியு சுமைப்பணி தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளா் முருகையன், மாவட்ட துணைத் தலைவா் பழனிவேல், மாவட்ட பொருளாளா் பாண்டியன், டாஸ்மாக் கிடங்கு தொழிலாளா்கள் பலா் பங்கேற்றனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்களுக்கு ஆதரவாக சிஐடியு நிா்வாகிகள், டாஸ்மாக் கிடங்கு மாவட்ட மேலாளா் பிரேம்சுந்தா் முன்னிலையில், ஒப்பந்ததாரா்களுடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.