திருவாரூரில் பல்வேறு குற்றச்செயல்களில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா்.
திருவாரூா் நகர காவல் சரகம் பேபி டாக்கீஸ் சாலை பகுதியைச் சோ்ந்தவா் தியாகு என்ற தியாகராஜன் (54). இவா், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததையடுத்து, இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாா் பரிந்துரைத்தாா்.
அதன்பேரில், மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் தியாகராஜனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.