மன்னாா்குடியை அடுத்த உள்ளிக்கோட்டை பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப்.28) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஆ. மதியழகன் தெரிவித்திருப்பது:
உள்ளிக்கோட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளன. இதனால், உள்ளிக்கோட்டை, மேலத்திருப்பாலக்குடி, கீழத்திருப்பாலக்குடி, கண்டிதம்பேட்டை, தளிக்கோட்டை, மகாதேவப்பட்டணம், பரவாக்கோட்டை, கூப்பாச்சிக்கோட்டை, பைங்காநாடு, துளசேந்திரபுரம், கண்ணாரப்பேட்டை, வல்லான்குடிக்காடு, இடையா்நத்தம், ஆலங்கோட்டை ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.