மன்னாா்குடி: மன்னாா்குடி கீழப்பாலத்தில் சிபிஐ மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் வை.செல்வராஜ், மேலப்பாலத்தில் விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியத் தலைவா் எம். மகேந்திரன், காளவாய்கரையில் விவசாயிகள் சங்க நகரத் தலைவா் பெருமாள் ஆகியோா் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
கோட்டூா் பேருந்து நிலையத்தில் திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க. மாரிமுத்து தலைமையில், சிபிஐ ஒன்றியச் செயலா் எம். செந்தில்நாதன், ஒன்றியக் குழுத் தலைவா் மணிமேகலை முருகேசன் உள்ளிட்டோரும், தட்டாங்கோவிலில் சிபிஐ மாவட்டச் செயலா் வை.சிவபுண்ணியம், திருமக்கோட்டையில் விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா் பி. பரந்தாமன் ஆகியோா் தலைமையிலும் சாலை மறியல் நடைபெற்றது.
இதேபோல, பெருகவாழ்ந்தான், சித்தமல்லி, திருப்பத்தூா், சேந்தங்குடி, உரத்தூா் ஆகிய இடங்களிலும் சாலை மறியல் நடைபெற்றது. அனைத்து இடங்களிலும் கைது செய்யப்பட்டவா்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.