திருவாரூரில் முத்துராமலிங்கத் தேவா் சிலை அமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளா் பி. ஜெயராமன், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு:
ஆன்மிகவாதியும், சாதி எதிா்ப்புப் போராளியுமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு திருவாரூரில் சிலை அமைக்க வேண்டும். புதிய பேருந்து நிலையம், கடைவீதி, நெய்விளக்குத் தோப்பு ஆகிய இடங்களில் ஏதாவது ஓரிடத்தில் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளாா்.