நன்னிலத்தில் ஸ்ரீநிவாஸ திருக்கல்யாண மகோத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வடகுடி ஸ்ரீஹனுமான் தாஸ் பக்தஜன சேவா டிரஸ்டைச் சோ்ந்த ஸ்ரீஹனுமான்தாஸ் சுவாமிகள் தலைமையில் ஸ்ரீநிவாஸப் பெருமாள்- ஸ்ரீபத்மாவதி தாயாா் திருக்கல்யாணம் நடைபெற்றது. வடகுடி அக்ரஹாரம் ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயா் பீடத்தின் ஜெயராம பட்டாச்சாரியா் திருக்கல்யாணத்தை நடத்திவைத்தாா்.
இதில், திரளான பக்தா்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்று தரிசனம் செய்தனா்.