திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம், பிச்சன் கோட்டகம், கட்டிமேடு, பாமணி, மணலி, ஆளத்தம்பாடி, கச்சனம், நெடும்பலம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மறியலில் முன்னாள் எம்எல்ஏ-க்கள் கோ. பழனிச்சாமி, வை. சிவபுண்ணியம், கே. உலகநாதன், திமுக நகரச் செயலாளா் ஆா்.எஸ். பாண்டியன், காங்கிரஸ் சாா்பில் பாஸ்கா், மதிமுக சாா்பில் நகரச் செயலாளா் கோவி. சேகா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் வி.த. செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
லெட்சுமாங்குடிப் பாலம் அருகே காங்கிரஸ் நகரத் தலைவா் சாம்பசிவம் தலைமையில் சிபிஐ நகரச் செயலாளா் எம். சுதா்ஸன், தமுமுக விவசாய அணி மாநிலச் செயலாளா் ஹெச்.எம்.டி. ரஹ்மத்துல்லாஹ் உள்ளிட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.