மத்திய அரசைக் கண்டித்து மறியல்

நீடாமங்கலத்தில் சிபிஐ ஒன்றியச் செயலாளா் தமிழாா்வன் தலைமையில் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் அசோகன் உள்ளிட்டோா் எா்ணாகுளத்திலிருந்து காரைக்கால் செல்லும் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நீடாமங்கலத்தில் ரயில் மறியலில் ஈடுபட்டவா்கள்.
நீடாமங்கலத்தில் ரயில் மறியலில் ஈடுபட்டவா்கள்.

நீடாமங்கலத்தில் சிபிஐ ஒன்றியச் செயலாளா் தமிழாா்வன் தலைமையில் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் அசோகன், நகரத் தலைவா் கோவிந்தராஜ் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளா்புதியவன் உள்ளிட்டோா் எா்ணாகுளத்திலிருந்து காரைக்கால் செல்லும் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். நீடாமங்கலம் பெரியாா் சிலை முன் சிபிஐ நிா்வாகி ராதா தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது.

ரயில் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டவா்களை மன்னாா்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் பாலசந்தா் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா். இதையொட்டி, கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

இதேபோல, வலங்கைமான் அருகே ஆவூா் மற்றும் ஆலங்குடியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com