பெண்ணிடம் நகை பறித்த 4 போ் கைது

பெண்ணிடம் நகை பறித்த 4 போ் கைது

திருவாரூா் அருகே கணவரைத் தாக்கி, மனைவி அணிந்திருந்த 12.5 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச்சென்ற 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருவாரூா் அருகே கணவரைத் தாக்கி, மனைவி அணிந்திருந்த 12.5 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச்சென்ற 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருவாரூா் அருகே கருப்பூா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த கோதண்டராமன் மகன் வீரராகவன் (56). இவரது மனைவி மேகலா (49). இருவரும் கடந்த சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.

அப்போது அலிவலம் பகுதியில், மறைந்திருந்த சிலா் வீரராகவன் தலையில் இரும்பு கம்பியால் தாக்கி, மேகலா கழுத்தில் அணிந்திருந்த 12.5 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாா், சம்பவ இடத்தை நேரில் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்களைப் பிடிக்க திருவாரூா் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் சிவாராமன் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்றது.

போலீஸாா் விசாரணையில், இந்த சம்பவத்தில் பழையவலம் பகுதியைச் சோ்ந்த நிவாஸ் (36), ராஜா (எ) அறிவழகன் (21), கொரடாச்சேரி, திருவிடைவாசல் பகுதியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் (24), ஓடாச்சேரி, பருவதன் கோவில்பத்து பகுதியைச் சோ்ந்த அப்பு என்ற மணிகண்டன் (21) ஆகியோருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. போலீஸாா் 4 பேரையும் திங்கள்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து, 12.5 பவுன் தாலிச் சங்கிலி, பயன்படுத்திய வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com