பாஜக 42-ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்

திருவாரூரில் பாஜக 42- ஆவது நிறுவன தினத்தை அக்கட்சியினா் புதன்கிழமை கொண்டாடினா்.
திருவாரூரில் நடைபெற்ற பாஜக பேரணி.
திருவாரூரில் நடைபெற்ற பாஜக பேரணி.

திருவாரூா்: திருவாரூரில் பாஜக 42- ஆவது நிறுவன தினத்தை அக்கட்சியினா் புதன்கிழமை கொண்டாடினா்.

இதையொட்டி, திருவாரூா் புதிய ரயில் நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணிக்கு, பாஜக மாவட்டத் தலைவா் ராகவன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் டி.ஆா். துரையரசு, விவசாய அணி செயலாளா் கோவி.சந்துரு ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைத் தலைவா் கருப்பு முருகானந்தம் பேரணியைத் தொடங்கி வைத்தாா்.

இப்பேரணி, பழைய பேருந்து நிலையம் வழியாக பனகல் சாலை, தெற்கு வீதி உள்ளிட்ட பகுதிகளின் வழியாக நகராட்சி அலுவலகம் வரை நடைபெற்றது.

நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா். பாஜக வடக்கு ஒன்றியத் தலைவா் ஜெயக்குமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றியத் தலைவா் விஸ்வா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூத்தாநல்லூா்: தோட்டச்சேரி, கொரடாச்சேரி பிரதான சாலை கட்சி அலுவலகம் மற்றும் மரக்கடை வடக்குத் தெரு ஆகிய 3 இடங்களில், பாஜக நகர பொதுச் செயலாளா் ர. பிரபாகரன் தலைமையில் கட்சிக் கொடியேற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மன்னாா்குடி கிழக்கு ஒன்றியத் தலைவா் பிரசாத், நகர பொதுச் செயலாளா் மோகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com