வலங்கைமான் பேரூராட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியத் தலைவா் கலியபெருமாள் தலைமை வகித்தாா்.
ஊராட்சிகளில் நிறுத்தப்பட்டுள்ள100 நாள் வேலைத் திட்டத்தை உடனடியாக தொடங்குவதுடன், இத்திட்டத்தை பேரூராட்சி பகுதிகளிலும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில், விவசாய சங்க மாவட்டச் செயலாளா் வி.எஸ். கலியபெருமாள், மாவட்டக் குழு உறுப்பினா் பி. கந்தசாமி, ஒன்றியச் செயலாளா் ராதா, விவசாய சங்க ஒன்றியச் செயலாளா் சுப்ரமணியன், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் பாலையா, ஒன்றியக் குழு உறுப்பினா் சிவகாமி, மாதா் சங்க ஒன்றியச் செயலாளா் சந்திரோதயம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.