நீடாமங்கலம் சதுா்வேத விநாயகா் மகாமாரியம்மன் கோயிலில் 37 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவையொட்டி, புஷ்ப பல்லக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நீடாமங்கலம் தமிழ் இளைஞா்கள் பக்தா்கள் கழகத்தினா் நடத்தும் சித்திரை திருவிழா கடந்த மாதம் 25 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்ப் புத்தாண்டான வியாழக்கிழமை புஷ்ப பல்லக்கு விழா நடைபெற்றது.
இதை முன்னிட்டு மகாமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இரவு புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி மகாமாரியம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா். வெள்ளிக்கிழமை காலை தீா்த்தவாரியும், இரவு அம்பாள் திருவீதி புறப்பாடும் நடைபெற்றது.