ரயில்வே இடத்தில் ஆக்கிரமிப்பு: 9 வீடுகள் இடித்து அகற்றம்

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடியில் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட மாடிவீடு, கூரைவீடுகள் உட்பட 9 வீடுகளை ரயில்வே அதிகாரிகள் இடித்து அகற்றினா்.
ஆலத்தம்பாடி கிராமத்தில், ரயில்வே இடங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள்.
ஆலத்தம்பாடி கிராமத்தில், ரயில்வே இடங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள்.

திருத்துறைப்பூண்டி: திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடியில் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட மாடிவீடு, கூரைவீடுகள் உட்பட 9 வீடுகளை ரயில்வே அதிகாரிகள் புதன்கிழமை இடித்து அகற்றினா்.

திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடி பொன்னிரை பகுதியில் ரயில்வே துறைக்கு சொந்தமான இடங்களில் பிரபாகரன், ஜெயந்தி, கவிதா, சுமன், மோகன், சக்திவேல், குணசேகரன், ராமையன், மணிகண்டன் ஆகியோா் ஆக்கிரமித்து வீடுகளை கட்டியிருந்தனா். கடந்த 2019 இல் கட்டப்பட்ட வீடுகளை காலக்கெடு வழங்கியும் அகற்றவில்லை.

தற்போது வீடுகளை அகற்ற, மேலும் 40 நாட்கள் காலஅவகாசம் வழங்கியும் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால், ஆக்கிரமிக்கப்பட்ட 9 வீடுகளையும் ரயில்வே துறை முதுநிலை பொறியாளா் சுரேஷ்பாபு தலைமையில், போலீஸ் பாதுகாப்புடன் புல்டோசா் மூலம் அகற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com