திருத்துறைப்பூண்டி அருகே சாலைக்கடை முதல் கட்டிமேடு வரை பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நூதனப் போராட்டம் வியாழக்கிழமை நடை பெற்றது.
ஆா்ப்பாட்டத்திற்கு ஆதிரெங்கம் கிளைச் செயலாளா் ராஜா தலைமை வகித்தாா். மாநிலக் குழு ஐ.வி. நாகராஜன், மாவட்டச் செயற்குழு ஜோதிபாசு, மாவட்ட குழு உறுப்பினா்கள் டி. சுப்ரமணியன், ஜோதிபாசு, பிரகாஷ், ஒன்றியச் செயலாளா் காரல்மாா்க்ஸ், ஒன்றியக் குழு ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பழுதடைந்துள்ள கொருக்கை, சேகல், ஆதிரெங்கம், கட்டிமேடு ஊராட்சி சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி பாடை ஊா்வலம் நடைபெற்றது. இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி ஒன்றிய ஆணையா் (ஊராட்சிகள்) சிவக்குமாா், ஒன்றியப் பொறியாளா் சூரியமூா்த்தி, காவல் ஆய்வாளா் கழனியப்பன், ஆதிரங்கம் வருவாய் ஆய்வாளா் சிவசங்கரி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, சாலை தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கியதையடுத்து ஆா்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.