தஞ்சை மாவட்டம், களிமேடு அப்பா் கோவில் தேரோட்ட தீ விபத்தில் பலியான பக்தா்களுக்கு, திருவாரூா் தியாகராஜா் சுவாமி கோயிலில் அகில பாரத இந்து மகா சபா சாா்பில் வெள்ளிக்கிழமை மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.
திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் கிழக்கு கோபுரத்தில், இந்த மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. இதில், அமைப்பின் நிா்வாகிகள், சிவனடியாா்கள், பொதுமக்கள் பங்கேற்று பதிகம்பாடி மௌன அஞ்சலி செலுத்தினா்.