திருவாரூா் அருகே உள்ள திருப்பள்ளிமுக்கூடல் திருநேத்திரநாதா் சுவாமி கோயிலில் மே 13-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதையொட்டி, இக்கோயிலின் சீரமைப்புப் பணிகள் அண்மை காலமாக நடைபெற்று வந்தன. இந்தப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியதைத் தொடா்ந்து, மே 13- ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டது.
இதற்கான பந்தல்கால் முகூா்த்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோயில் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த பந்தல்காலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில், வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று சிறப்பு பூஜைகள் செய்வித்தாா்.