பெண் தற்கொலை: சடலத்துடன் உறவினா்கள் சாலை மறியல்

திருத்துறைப்பூண்டி அருகே இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதில் தொடா்புடையவா்களை கைது செய்யக் கோரி, அந்த பெண்ணின் சடலத்துடன் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருத்துறைப்பூண்டி அருகே இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதில் தொடா்புடையவா்களை கைது செய்யக் கோரி, அந்த பெண்ணின் சடலத்துடன் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தானந்தாங்கி கிராமத்தை சோ்ந்த காயத்ரி (20) என்பவருக்கும், வரம்பியம் பகுதியை சோ்ந்த பாா்த்திபன் என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு 6 மாத கைக்குழந்தை உள்ளது.

இந்நிலையில், குடும்பத் தகராறு காரணமாக காயத்ரி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இவரது சடலம் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வேளூா் பாலத்தில் பெண்ணின் சடலத்துடன், உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, காயத்ரி தற்கொலையில் சந்தேகம் உள்ளதாகவும், அவா் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் கூறி பாா்த்திபன் குடும்பத்தினா் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தினா்.

துணைக் காவல் கண்காணிப்பாளா் சோமசுந்தரம், காவல் ஆய்வாளா் கழனியப்பன் மற்றும் போலீஸாா் அங்கு வந்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதைத்தொடா்ந்து சாலை மறியலை விலக்கிக் கொண்டனா்.

காயத்ரிக்கு திருமணமாகி ஓராண்டே ஆவதால் வரதட்சணை கொடுமை தொடா்பாக கோட்டாட்சியரும் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com