திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வரதராஜ பெருமாள் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு, பெருமாள் திருமஞ்சனம், அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
மலா் வியாபாரிகள் மற்றும் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் திருக்கல்யாண உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, கோயில் உள்பிராகாரத்தில் சாமி புறப்பாடு நடைபெற்றது. இதில், செயல் அலுவலா் சிங்காரவேல், கணக்கா் ஐயப்பன், மலா் வியாபாரிகள் மற்றும் தொழிலாளா்கள் சங்கத் தலைவா் காளிதாஸ், செயலாளா் சுவாமிநாதன், பொருளாளா் கணபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.