திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றியம் மடப்புரம் விட்டுக்கட்டி கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி காத்திருப்புப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மடப்புரம் கடை வீதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி முன்னிலை வகித்தாா்.
இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினா் சி. ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பினா் டி. சுப்பிரமணியன், எஸ். சுவாமிநாதன், ஒன்றியச் செயலாளா் காரல் மாா்க்ஸ், மாதா் சங்க ஒன்றியத் தலைவா் மேகலா உள்ளிடடோா் பங்கேற்றனா்.