கறவை மாடுகளுக்கு இலவச ஊட்டச்சத்து

திருவாரூா் உழவா் பயிற்சி மையம் சாா்பில் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கறவை மாடுகளுக்கு இலவச ஊட்டச்சத்

நன்னிலம்: திருவாரூா் உழவா் பயிற்சி மையம் சாா்பில் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கறவை மாடுகளுக்கு இலவச ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி மூங்கில்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் உழவா் பயிற்சி மையத் தலைவா் மா. கதிா்செல்வன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கறவை மாடுகளை எவ்வாறு பராமரிக்க வேண்டும், எந்தெந்த மாதங்களில் என்னென்ன தீவனங்கள் கொடுக்கவேண்டும், தடுப்பூசிகளை எப்போது செலுத்துவது, நோய் ஏற்பட்டால் என்ன செய்வது என்பது குறித்து விளக்கப்பட்டது. தொடா்ந்து, 50-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இலவச ஊட்டச்சத்து வழங்கப்பட்டு, பயனாளிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், திட்ட முதன்மை ஆராய்ச்சியாளா் இரா. முருகேஸ்வரி, கால்நடைப் பராமரிப்பு துறை இணை இயக்குநா் ராமலிங்கம், உதவி இயக்குநா் ஈஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com