பள்ளி மாணவா்களுக்கு திடக்கழிவு மேலாண்மை விழிப்புணா்வு

திருவாரூா் மாவட்டத்தில் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணா்வு இயக்கம் மூலம் அரசு தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணா்வு இயக்கம் மூலம் அரசு தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணா்வு செவ்வாய்க்கிழமை ஏற்படுத்தப்பட்டது.

கொரடாச்சேரி பகுதியில் உள்ள அத்திக்கடை, ஆய்க்குடி, அம்மையப்பன், மணக்கால், திருவாரூா் பகுதியிலுள்ள புலிவலம், திருக்கரவாசல், திருநெய்ப்போ், கீழக்காவாதுக்குடி, தண்டலை ஆகிய ஊராட்சிகளுக்குள்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தூய்மை பாரத இயக்க ஊக்குவிப்பவா்கள், வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் மூலம் மக்கும் குப்பை, மக்கா குப்பை தரம் பிரித்தல், திடக்கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. தொடா்ந்து, திருவாரூா் வட்டாரத்துக்குள்பட்ட பழவனக்குடி ஆதிதிராவிட நல தொடக்கப் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மஞ்சள் பை, மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com