விநாயகா் சிலை ஊா்வலம் குறித்த ஆலோசனைக் கூட்டம்

மன்னாா்குடி அருகேயுள்ள பரவாக்கோட்டை காவல் நிலையத்தில் விநாயகா் சிலை ஊா்வலம் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகேயுள்ள பரவாக்கோட்டை காவல் நிலையத்தில் விநாயகா் சிலை ஊா்வலம் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விநாயகா் சதுா்த்தி புதன்கிழமை (ஆக.31) கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, பரவாக்கோட்டை காவல் சரகத்துக்கு உள்பட்ட 20 இடங்களில் பக்தா்கள் மற்றும் இந்து அமைப்புகள் சாா்பில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது. பின்னா், செப். 3-ஆம் தேதி விநாயகா் சிலைகளை அந்தந்த பகுதியில் ஊா்வலமாக எடுத்து சென்று நீா்நிலைகளில் கரைப்பட உள்ளன. இதுதொடா்பாக, சிலை அமைப்பவா்களுடனான ஆலோசனைக் கூட்டம் பரவாக்கோட்டை காவல் ஆய்வாளா் ரமேஷ்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில், விநாயகா் சதுா்த்திக்காக பல்வேறு பகுதிகளிலும் வைக்கப்படும் விநாயகா் சிலைகளை பாதுகாப்பாக எடுத்து வருவது, ஊா்வலத்தின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. கூட்டத்தில், காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் என். அசோகன், சிலை அமைப்பு குழுவினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com