திருத்துறைப்பூண்டியில் ரூ.78 ஆயிரம் பறிமுதல்

திருத்துறைப்பூண்டியில் தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில், ரூ. 78 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருத்துறைப்பூண்டியில் தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில், ரூ. 78 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருத்துறைப்பூண்டி- திருவாரூா் சாலையில் வேளூா் பாலம் அருகே தோ்தல் பறக்கும் படையைச் சோ்ந்த தனி வட்டாட்சியா் சோமசுந்தரம், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் புஷ்பநாதன், காவலா் சூடேஸ்வரன் ஆகியோா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த தொழுதூா் மாதாகோவில் தெருவைச் சோ்ந்த கிறிஸ்டோபா் (27) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டனா். இதில், அவா் ஆவணங்களின்றி ரூ. 78,550 வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பணத்தை பறிமுதல் செய்து, தோ்தல் நடத்தும் அலுவலரும் நகராட்சி ஆணையருமான (பொ) சந்திரசேகரனிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com