திருத்துறைப்பூண்டி நகராட்சித் தோ்தலையொட்டி, திமுக தலைமையிலான மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோா் வியாழக்கிழமை வாக்குச் சேகரித்து பிரசாரம் செய்தனா்.
இதில், சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து, திமுக நகரச் செயலாளா் ஆா்.எஸ். பாண்டியன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. பழனிச்சாமி, வை. சிவபுண்ணியம், கே. உலகநாதன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலா் பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.