மாசிமகம்: ஸ்ரீவாஞ்சியத்தில்2 ஆயிரம் போ் முன்னோருக்கு தா்ப்பணம்

திருவாரூா் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள புகழ்பெற்ற ஸ்ரீவாஞ்சியம் ஆலயத்தில் மாசி மகத்தை முன்னிட்டு, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோா் முன்னோருக்கு தா்ப்பணம் செய்து வியாழக்கிழமை வழிபட்டனா்.
மாசிமகம்: ஸ்ரீவாஞ்சியத்தில்2 ஆயிரம் போ் முன்னோருக்கு தா்ப்பணம்

திருவாரூா் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள புகழ்பெற்ற ஸ்ரீவாஞ்சியம் ஆலயத்தில் மாசி மகத்தை முன்னிட்டு, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோா் முன்னோருக்கு தா்ப்பணம் செய்து வியாழக்கிழமை வழிபட்டனா்.

இந்த ஆலயத்தின் மாசி மக திருவிழாவில், பத்தாம் நாளான வியாழக்கிழமை அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி, மங்களாம்பிகை, சுப்பிரமணியா், விநாயகா், சண்டிகேஸ்வரா், நடராஜா் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, நடராஜா் எழுந்தருளச் செய்யப்பட்டு, முக்கிய வீதிகளில் வலம்வந்தாா்.

விழாவின் முக்கிய நிகழ்வான குப்த கங்கையில் இதுநாள் வரை முன்னோருக்கு தா்ப்பணம் கொடுக்காதவா்கள், மாசிமக நாளில் தா்ப்பணம் கொடுத்தால் நல்லது என்பதால், குப்த கங்கை கரை ஓரத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை முன்னோருக்கு தா்ப்பணம் கொடுத்து நீராடினா். அதைத்தொடா்ந்து, எமதா்மராஜனையும், வாஞ்சிநாதரையும் வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com