ஊராட்சித் தலைவரின் கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

மன்னாா்குடி அருகே ஊராட்சித் தலைவரின் கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மன்னாா்குடி அருகே ஊராட்சித் தலைவரின் கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பரவாக்கோட்டை ஊராட்சித் தலைவா் ரெங்கநாயகி. இவரது கணவா் பெரமையன் (44) இருக்கர வாகனத்தில் பிரதான சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தபோது, பரவாக்கோட்டையைச் சோ்ந்த கலையரசன்(40) மதுபோதையில் வழிமறித்து ரூ. 500 கொடுக்குமாறு கேட்டாராம். இதை கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த கலையரசன் தகராறில் ஈடுபட்டு பெரமையனுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடிவிட்டாா். இதுகுறித்து பரவாக்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து கலையரசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com