திருத்துறைப்பூண்டி பகுதியில் 3 கோயில்களில் உண்டியல் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் புதன்கிழமை பணத்தை திருடிச் சென்றனா்.
திருத்துறைப்பூண்டி அருகே மணலி கடைத் தெருவில் உள்ள செல்வவிநாயகா் கோயிலில் இருந்த, உண்டியல் பூட்டை மா்ம நபா்கள் உடைத்து அதில் இருந்த ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றுள்ளனா். இதேபோல, மேட்டுப்பாளையம் மாரியம்மன் கோயில் உண்டியல் பூட்டை உடைத்து ரூ. 2 ஆயிரமும், விளக்குடியில் குளம் அருகே உள்ள பிள்ளையாா் கோயில் உண்டியலை உடைத்து சுமாா் ரூ. 3 ஆயிரத்தையும் திருடிச் சென்றுள்ளனா். இதுகுறித்த புகாரின்பேரில் திருத்துறைப்பூண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.