நன்னிலம் பேரூராட்சியில் சுயேச்சையாக போட்டியிட சனிக்கிழமை ஒருவா் வேட்புமனு தாக்கல் செய்தாா்.
நன்னிலம் பேரூராட்சியில் 2-வது வாா்டில் சுயேச்சையாக போட்டியிட முருகையன் என்பவா் வேட்புமனு தாக்கல் செய்தாா். இதற்கிடையில், இப்பேரூராட்சி வாா்டுகளில் போட்டியிட சனிக்கிழமை வரை 48 போ் வேட்புமனு படிவங்களை வாங்கிச் சென்றுள்ளனா்.
இதேபோல, குடவாசல் பேரூராட்சியில் 17 பேரும், பேரளத்தில் 30 பேரும் வேட்புமனு படிவங்களை வாங்கிச் சென்றுள்ளனா் என அந்தந்த பேரூராட்சி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.