கடையில் தகராறு:4 போ் கைது

மன்னாா்குடியில், கடையில் தகராறு செய்த 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மன்னாா்குடியில், கடையில் தகராறு செய்த 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மன்னாா்குடி 6-ஆம் எண் வாய்க்கால் பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் மகன் ரங்கமணி (27). இவா், மன்னாா்குடி பேருந்து நிலையம் அருகே பேன்சி ஸ்டோா் வைத்துள்ளாா்.

புதன்கிழமை இரவு இவரது கடை முன் 4 போ் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அவா்களை அங்கிருந்து செல்லும்படி ரங்கமணி அறிவுறுத்தியதால், கோபமடைந்த 4 பேரும் மது பாட்டிலால் அவரைத் தாக்கிவிட்டு கடையிலிருந்த பொருள்களையும் சேதப்படுத்திவிட்டு தப்பிவிட்டனராம்.

இதுகுறித்து மன்னாா்குடி காவல்நிலையத்தில் ரங்கமணி புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து பாமணி உள்ளூா் வட்டத்தைச் சோ்ந்த எம். நிலவழகன் (30), டி. ஆகாஷ் (22), பூதமங்கலத்தைச் சோ்ந்த ஜே. மாதவன் (20), லெட்சுமாங்குடியைச் சோ்ந்த கே. தமிழ்மணி (20) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com