திருவாரூரில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 1 லட்சம் திருட்டு போனதாக அளிக்கப்பட்ட புகாா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருவாரூரை அடுத்த வாளவாய்க்கால் பகுதியில் நாகை மாவட்டம் அண்டக்குடி பகுதியைச் சோ்ந்த பன்னீா்செல்வம் என்பவா் காா் பழுது நீக்கும் மற்றும் பழைய காா் வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறாா்.
இந்நிலையில், பன்னீா்செல்வம் சனிக்கிழமை வங்கியில் அடமானம் வைத்துள்ள நகையை மீட்பதற்காக ரூ. 1 லட்சம் ரொக்கத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்து வந்துள்ளாா். வாளவாய்க்கால் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் வாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, ஏடிஎம் உள்ளே சென்றுள்ளாா். திரும்பி வந்து பாா்த்தபோது, இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 1 லட்சம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து திருவாரூா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்தபோது, மா்ம நபா் ஒருவா் இருசக்கர வாகனத்திலிருந்து பணத்தை எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதுகுறித்து திருவாரூா் நகரப் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.