திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேலப்பெருமழை ஸ்ரீ கற்பக விநாயகா், வேம்புடை அய்யனாா், திருவாா்குழலி ஸ்ரீ மாரியம்மன் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை புதன்கிழமை தொடங்கியது. வெள்ளிக்கிழமை காலை நான்காம் கால யாக பூஜை, பூா்ணாஹுதி நிறைவு பெற்றதும்,10 மணியளவில் விமான கலசங்களுக்கு புனிதநீரால் குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா், சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது.
இதில், சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளா் ஆா். வேதரத்தினம், முன்னாள் ஊராட்சித் தலைவா் ராஜமாணிக்கம், ரோட்டரி சங்க முன்னாள் துணை நிலை ஆளுநா் ஆா். இளங்கோ, மாவட்ட பேரிடா் மேலாண்மை ஆலோசனைக் குழு உறுப்பினா் ஆா். செல்வகணபதி, தமாகா வட்டாரச் செயலாளா் எம். குணசேகரன், திருக்குறள் பேரவை தலைவா் சிவபுண்ணியம் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.