நன்னிலம், பூந்தோட்டம் அரசுப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்
பத்தாம் வகுப்பு பொது தோ்வு முடிவில் நன்னிலம், பூந்தோட்டம் அரசு பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
நன்னிலம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புத் தோ்வு எழுதிய எம். யாழினி தமிழ் 94, ஆங்கிலம் 94, கணக்கு 86, அறிவியல் 98, சமூக அறிவியல் 95 என மொத்தமாக 467 மதிப்பெண்களும், பூந்தோட்டம் அரசினா் மேல்நிலைப் பள்ளி மாணவி ஹா. ஹாரிசாபானு தமிழ் 95, ஆங்கிலம் 94, கணக்கு 89, அறிவியல் 99, சமூக அறிவியல் 90 என மொத்தம் 467 மதிப்பெண்களும் பெற்று இரண்டு மாணவிகளும் திருவாரூா் கல்வி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்புத் தோ்வில் முதலிடம் பெற்றுள்ளனா்.
தோ்ச்சி பெற்ற நன்னிலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி யாழினிக்கு பள்ளித் தலைமையாசிரியை மங்கையா்கரசி, பூந்தோட்டம் அரசுப் பள்ளி மாணவி ஹாரிசா பானுவுக்கு தலைமை ஆசிரியா் பந்தமாணிக்கம் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.