திருவாரூரில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஜூன் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்ட விவசாயிகளின் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஜூன் 30 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட முன்னோடிவிவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்கலாம்.