தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க நீடாமங்கலம் கிளை பொறுப்பாளா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு கிளைத் தலைவா் எஸ்.எஸ். ராமன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் சு. அம்பிகாபதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா்.
கூட்டத்தில், நடந்துமுடிந்த மாவட்ட மாநாடு மற்றும் எதிா்வரும் மாநில மாநாடு, கிளை செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டன. முன்னதாக, கிளை செயலாளா் பேராசிரியா் சண்முகம் வரவேற்றாா். நிறைவாக, துணைத் தலைவா் ராஜா நன்றி கூறினாா்.