திருவாரூரில் வயல் வெளியில் வைக்கப்பட்ட தீ, கோரைப் புற்களுக்குப் பரவியதால், அருகில் உள்ள ரயில் நிலையப் பகுதி புகை மூட்டமாக காணப்பட்டது.
திருவாரூா் ரயில் நிலையம் அருகேயுள்ள புகையிலைத் தோட்டம் பகுதியில் ரயில் தண்டவாளத்துக்கு அருகிலுள்ள வயலில் தீ வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் வயல் பகுதியில் இருந்த கோரைப் புற்கள் எரியத் தொடங்கின. இதனால், கடுமையான புகை மூட்டம் ஏற்பட்டு, அப்பகுதி வழியாக செல்வோருக்கும் ரயிலில் பயணித்த பயணிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தியது.
மேலும் இந்த புகை மூட்டம் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகள், ரயில் நிலையம், மேம்பாலம் ஆகிய இடங்களிலும் பரவி, நீண்ட நேரம் பாதிப்பை ஏற்படுத்தியது.