போக்சோ சட்டத்தில் கட்டுமான தொழிலாளா் கைது

கூத்தாநல்லூா் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த கட்டுமானத் தொழிலாளா் போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கூத்தாநல்லூா் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த கட்டுமானத் தொழிலாளா் போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நாகப்பட்டினம் மாவட்டம், பூவத்தடி, பிரதாம ராமாபுரத்தைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (38), கட்டுமானத் தொழிலாளா். இவா், கடந்த 3 ஆம் தேதி சித்திரையூா் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் இவரது உறவினா் பெண்ணை வெளியூருக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளாா்.

இதுகுறித்து பெண்ணின் தந்தை வடபாதிமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளா் டீ. முருகேசன் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவுசெய்து பழனிச்சாமியை கைதுசெய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com