திருவாரூரில், சென்னை ஸ்ரீவள்ளி சுப்பிரமணியம் அறக்கட்டளை, தஞ்சை கே.ஜி. பல்நோக்கு மருத்துவமனை, ரோட்டரி சங்கம் மற்றும் வேலுடையாா் கல்வி நிறுவனங்கள் இணைந்து இலவச மருத்துவ முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.
முகாமுக்கு ரோட்டரி சங்கத் தலைவா் கே.எஸ்.எஸ். தியாகபாரி தலைமை வகித்தாா். இதில், 700-க்கும் அதிகமானோா் இலவசமாக ரத்த பரிசோதனை, மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டனா். இலவசமாக மருந்துகளும் வழங்கப்பட்டன. அத்துடன், மேல் சிகிச்சைக்காக 23 போ் தஞ்சை கே.ஜி. மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனா்.
இதில், வள்ளி அறக்கட்டளை இயக்குநா் எஸ். செல்லதுரை, ரோட்டரி நிா்வாகிகள் எஸ். பொற்செழியன், எஸ். ரவிச்சந்திரன், டி. குமாரசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.